நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஈமான்தாரி இல்லை!

இறை ஒன்று!
மறை ஒன்று!
பிறை ஒன்று!

பெருநாள் மட்டும் மூன்றா?

என் குடும்பத்தார்களுக்கு என்று பெருநாளோ
அன்றுதான் எனக்கும் பெருநாள்!

என் உறவினர்களுக்கு என்று பெருநாளோ
அன்றுதான் எனக்கும் பெருநாள்!

என் அண்டை வீட்டார்களுக்கு என்று பெருநாளோ
அன்றுதான் எனக்கும் பெருநாள்!

என் ஊர் மக்களுக்கு என்று பெருநாளோ
அன்றுதான் எனக்கும் பெருநாள்!

எங்கள் மஹல்லாவில் என்று பெருநாளோ
அன்றுதான் எனக்கும் பெருநாள்!

பெருநாளின் சிறப்பே, நெடுநாட்கள்
கழித்து சொந்த ஊரில் ஒன்றுகூடி
உறவினர்களையும் ஊர் மக்களையும்
சந்தித்து கட்டி ஆரத்தழுவி,
ஒருவருக்கொருவர் அன்பையும்
பாசத்தையும் மகிழ்ச்சியையும்
பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதுதான்!

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக
கடக்க வேண்டிய பெருநாளை, பிளவுபட்டுக்
கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை!

பெருநாள் அன்று ஊரே சந்தோஷத்தில்
திளைத்திருக்க, நான் மட்டும் வீட்டில்
முடங்கிக் கிடக்க, நான் ஒன்றும்
அவ்வளவு பெரிய ஈமான்தாரி இல்லை!

என் மஹல்லாவாசிகளுடன் சேர்ந்தே
பெருநாள் கொண்டாட ஆசைப்படுகிறேன்!

அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர்
எனும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Comments

Popular Posts