பெரிய றாதி!

பெரிய றாதி!
~~~~~~~~~


ஏழெட்டு மக்கமார்க
ஏகப்பட்ட பேரன் பேத்திகனு
நாலு தலமுறை பார்த்த றாதி
எங்க பெரிய றாதி சைத்தூன் பீவி!

நாலஞ்சு வருசம் முன்ன - நீ
படுத்த படுக்கையா ஆகிப்போன
பிழைக்க மாட்டனு சொல்லிட்டாக
சொந்தபந்தம் கூடிட்டாக
உன்ன சந்தூக்குல கொண்டு போக;
ஆனாலும்,
மலக்குல் மௌத்தோடு சண்ட போட்டு
மீண்டு வந்தியே பெரிய றாதி!

கட்டுத்தறி உடுத்தி
கம்பீரமாய் வாழ்ந்த றாதி!
கட்டுடல் சுருங்கிப் போயி
கட்டிலோட முடங்கிட்டியே
கடந்த நாலு மாசமா!

கடைசி முறை பார்க்க வந்தேன்
கண்ணச் சுருக்கி பார்த்துக்கிட்டே
'யாஸிரு'னு பேரச் சொல்லி
அடையாளம் கண்டுகொண்ட!

நாலு நாளைக்கு முன்னாடியே
சோறு தண்ணிய கொறச்சிட்டியே
கடைசி வாயி தண்ணியோட
கண்ண தொறக்கலையே பெரிய றாதி!

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எங்களுடைய பெரிய றாரா தர்பார் சாய்பு ராவுத்தரின் மனைவியும் எங்களுடைய பெரிய றாதியுமான சைத்தூன் பீவி அவர்கள் நான்கு தினங்களுக்கு முன்பு வயது மூப்பின் காரணமாக வஃபாத் ஆகிவிட்டார்கள்.

அன்னாரின் மறுமை வாழ்வை இறைவன் சிறப்பானதாக ஆக்கி வைப்பானாக!

Comments

Popular Posts