கம்பம் ஜக்கரிய்யா பெரியத்தா
மே 10 மாலை 3 மணி இருக்கும். அலுவலகத்தில் இருந்தபோது எனது உறவினர் பாளையம் ஷேக் முஹையதீனிடமிருந்து ஒரு கால் வந்தது. பணியில் இருந்ததால் பின்பு அழைத்து பேசிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். பின்பு தொடர்ச்சியாக எனது மனைவியிடமிருந்து கால். உண்மையில், தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் வரும்போது `அது எந்த துக்கசெய்தியையும் கொண்டு வந்துவிடக்கூடாதே` என்று உள்ளம் பதறும். வழமையான நேரங்களைத் தவிர்த்து திடீரென ஊரில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் எப்போதுமே ஒரு பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். இந்தப் பதற்றம் முன்பு இருந்ததில்லை. ஆனால் கடந்த 3 வருடங்களாகவே இந்தப் பதற்றம் எனக்கு அவ்வவப்போது வருவதுண்டு. எனது இரத்த உறவினர்களுடன் ஏற்பட்ட சில பிரச்சினைகளும் மனக்கசப்புகளுமே இதற்கான முதன்மயான காரணங்களாக இருக்கலாம். புதிய பிரச்சினைகள் ஏதேனும் வந்துவிட்டதோ அல்லது ஏதேனும் துக்க செய்தியோ என்ற பதற்றம் வருவது இயல்பாகிவிட்டது. அன்றும் அதே நிலைமை. `ஜக்கரியா மாமா இறந்துட்டாங்கமா` என்று என் மனைவி உடைந்த குரலில் சொன்னபோது அந்த நடுக்கமும் பதற்றமும் இன்னும் அதிகரித்தது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரா